உயிரே உனக்காக அத்தியாயம் – 1

உயிரே உனக்காக அத்தியாயம் – 1

செருப்பு பிஞ்சிடும்! சத்தம் கேட்டு சுற்றியிருந்தவர் அனைவரும் பார்க்க சற்றே வெளிறிய முகத்துடன் ” மேடம்! யாரைப்பார்த்து சொல்றீங்க? என்றான் மகேஷ். ” உன்னைத்தான், செய்யறதை செஞ்சிட்டு கேள்வி வேறயா?” கோபத்தின் உச்சியில் இருந்தாள் நித்யா. ஏன் எதற்கு என்று தெரியாமல் அவமானத்தில் வெளிறி நின்றான் மகேஷ்.

Officeக்கு லேட் ஆன டென்ஷனில் கூட்டத்தில் வந்த பேருந்தில் அடித்து பிடித்து ஏறும்போது யாரோ ஒரு கோனல் ஆசாமி நித்யாவின் இடையில் கை வைத்து செய்த சேட்டையின் விளைவு தான் மகேஷ் அவமானப்பட காரணம். நித்யாவின் புகார் கேட்டு பாதி வழியில் இறக்கிவிடப்பட்டான் மகேஷ்.

நித்யா பார்ப்பவரை மயக்கி வசீகரித்து இழுக்கும் அழகு. உயர்ந்து வளைந்த வானவில் புருவம். அவற்றின் கீழே சொக்க வைக்கும் திராட்சை கண்கள் . சிறிய மிளகாய் போல கூரான நாசி. உலகில். உள்ள எல்லா சிவப்பையும் சேர்த்து வார்த்த உதடுகள்.அவற்றின் இடையில் நானும் இருக்கிறேன் என்று அவ்வப்போது எட்டிப்பார்க்கும் வெண் முத்துப்பற்கள். நாள் முழுதும் பளிச்சென்றிருக்க கடவுள் படைத்த காற்று உற்பத்தி செய்யும் கருங்கூந்தல். நிறம், சுண்டினால் இரத்தம் வரும் சிவப்பு. வளைந்து நெளிந்த இடை. ஒரு  ஐந்துஅடி உயரம். இன்னும் இன்னும் இரண்டாயிரம் பக்கங்கள் எழுதினாலும் தீராத ஒரு அழகு.

பெண்கள் நான்கு வகை

  1. அழகுண்டு அறிவில்லை
  2. அறிவுண்டு அழகில்லை
  3. அழகு அறிவு இரண்டும் இல்லை

ஆனால் நித்யா நான்காம் வகை அழகா இல்லை அறிவா என்று பட்டிமன்றம் நடத்தலாம், ஒன்றை மிஞ்சும் மற்றொன்று என கடவுள் பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை படைத்த ஒரு அற்புதம் அவள்.

பல கதைகளை போல நித்யாவின் அப்பா ஒரு தமிழ் ஆசிரியர். பெயர் வடிவேலன். கொடுத்து வைத்தவர், அழகான தமிழை தாயாகவும் அதேபோல அழகியமகளையும் பெற்றருக்கிறார். சிறுவயது முதலே தமிழும் தமிழர்பண்பாட்டையம் உணர்த்தி வளர்த்தியிருந்தார்.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப்படும்.”

என்ற குறளுக்கு உவமையாக நித்யாவை சொல்லாம். படித்தது CA, பணிபுரிவது பன்னாட்டு நிறுவனம், சென்னையின் முக்கிய பகுதியில் அலுவலகம். சரி நித்யாவின் வயதென்ன? என்ற கேள்வி வருகிறதா? பெண்ணின் வயதை பற்றி பேசுவது அநாகரீகம் என்பதால் அதை விடுப்போம்.

ஐயோ! பாதியில் இறங்கிய மகேஷ் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ?

—காத்திருங்கள்! விரைவில் சந்திப்போம்.

Leave a comment