உயிரே உனக்காக அத்தியாயம் 10
ஒரு நிமிடம் அதிர்ந்து போன மகேஷ் சுதாரித்துக்கொண்டாலும் அவனால் முழுவதுமாக மீண்டு வர முடியவில்லை. அவன் மனதில் இனம்புரியாத ஒரு வலியை உணர்ந்தான். “மகேஷ், ஏன் டல்லாயிட்டீங்க? நீங்களும் நித்யாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பரீங்களா? எனக்கென்னவோ நித்யாவுக்கு உங்களை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.”
“ஐயோ! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அங்கிள். நித்யா என்னோடு பெஸ்ட் friend, நீங்க சொன்னபடியெல்லாம் ஒன்றுமில்லை . நித்யா எங்கிட்டே சொல்லாமல் மறைச்சிட்டாங்களேங்கிற வருத்தம்தான்.”
“சாரி மகேஷ், இந்த காலத்து பிள்ளைங்க நீங்க எவ்வளவு தெளிவாக இருக்கீங்க. நான் அதுபுரியாம காதல் அது இது என ஏதேதோ பேசிட்டேன். எதையும் மனசில வைச்சுக்காதீங்க. சரி சரி வாங்க அவங்களை தனியாவிட்டா ஒரு நாள் முழுக்க பார்த்துக்கிட்டேயிருப்பாங்க.” எனக்கூறி நித்யா இருந்த இடம் நோக்கி நடக்க தொடங்கினார். தன் நினைவு தெரிந்த நாள்முதல் மகேஷுக்கு தோழிகள் யாரும் இருந்ததில்லை.நித்யாவிடம் அதனாலோ என்னவோ அவனுக்கு ஒரு நெருக்கம் ஏற்பட்டிருந்தது. ஆரம்பத்தில் அவனைவிட்டு விலகியிருந்தாலும் நாளடைவில் அவனது கள்ளங்கபடமற்ற உள்ளத்தால் நித்யா ஒரு நல்ல தோழியாக பழகி வந்தாள்.
“மகேஷ் இந்த மூணு புடவையில் எது எனக்கு நல்லாயிருக்கும். நீங்க சொல்லுங்க” எனக்கேட்டாள் நித்யா. கிளிப்பச்சை வண்ணத்தில் மயில் மற்றும் மாங்காய் போன்ற சரிகை வேலைப்பாடமைந்த ஒரு சேலை அவன் கவனத்தை கவர்ந்தது. “அந்த பச்சை உங்களுக்கு நல்லாயிருக்கும் நித்யா”. அவன் சொன்னதையே பில் போடச்சொன்னார்கள்.
“மகேஷ் நீங்க ஏதோ வாங்கணும்னு சொன்னீங்களே?”
“ஆமாம் எனக்கு ஒரு formal set எடுக்கணும் ஆனால் அது இங்க வேண்டாம் பக்கத்துல ரேமண்ட்ஸ்ல பார்ப்போம் .”
மகேஷுக்கும் உடையெடுத்து முடிக்கும்போது மணி 1.30யையும் தாண்டியிருந்தது. அருகிலிருந்த உணவகத்தில் சாப்பிட்டு முடித்து நித்யாவையும் அவள் பெற்றோரையும் வீட்டில் விட்டுவிட்டு சென்றான் மகேஷ் . அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் , நித்யாவிடம் நாம்தான் உரிமையெடுத்து பழகிவிட்டோமோ? அவள் நம்மை நண்பனாகக்கூட ஏற்றுக்கொள்ளவில்லையோ?
திங்கட்கிழமை காலை பஸ் ஸ்டாண்டில் நித்யாவை சந்தித்தான் மகேஷ் . இருவரும் காரில் புறப்பட்டனர் , எஃப்எம் ரேடியோவில் ரஜினிகாந்த் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர்களிடையே இருந்த மௌனத்தை நீட்ட விரும்பாமல் ஒருவழியாக கலைத்தான் “ஏன் நித்யா உங்களை பொண்ணு பார்க்க வராங்கன்னு எங்கிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லலை?”
“அப்பாடா, நல்ல வேளை மகேஷ் நீங்களே கேட்டுட்டீங்க, இதைப்பத்தி உங்ககிட்டே எப்படி பேசப்போறேன்னு பயந்துகிட்டிருந்தேன். நல்ல வேளை அப்பாவே சொல்லிட்டார். உங்ககிட்டே சொல்லக்கூடாதுன்னு இல்லை மகேஷ், பையனைப்பார்த்து ரெண்டு வீட்டுக்கும் பிடிச்சிருந்தா முதல்ல உங்ககிட்டேதான் சொல்லியிருப்பேன். உங்களுக்கே தெரியும் முடியறதுக்கு முன்னாடி எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு அப்பறமா முடியலைன்னா நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க அதான் சொந்தத்தில் கூட யார்கிட்டேயும் சொல்லலை. நீங்க என் close friendங்கிறதால உங்ககிட்டே சொல்லியிருப்பேன்னு அப்பா நினைச்சுருப்பாங்க.”
“ஐயாம் வெரி சாரி நித்யா. இந்த விஷயத்தில் நீங்க சொல்றதுதான் சரி. ஆனா உங்களைப்பிடிக்காதுன்னு சொன்னா அவனுக்கு ஏதோ கோளாறுன்னு அர்த்தம்.”
வெட்கத்தால் ஒரு புன்னகை புரிந்தாள். “சரி பையன் பேர் என்ன? போட்டோ பார்த்தீங்களா?”
” ஹும் பேரு பரத், அம்மா போட்டோ காட்டினாங்க. பி.காம் முடிச்சிட்டு AGS ஆபிஸில் அக்கவுன்டன்டா இருக்கார். ஒரு அக்கா அவங்களுக்கும் கல்யாணமாயிடுச்சு.”
“பையனை உங்களுக்கு பிடிச்சிருக்கா?”
“தெரியலை மகேஷ், திடீர்னு இப்படி அரேஞ்ச் பண்ணிட்டாங்க. என்ன செய்யன்னு தெரியலை”
“நித்யா, ஒன்று மட்டும் நியாபகத்தில வெச்சுக்கங்க எந்த முடிவு எடுக்கறதுக்கு முன்னாடியும் ஆயிரம் தடவை வேணும்னாலும் யோசிச்சு முடிவெடுங்க, ஏன்னா நீங்க எடுக்கிற முடிவு உங்க வாழ்க்கையை மாத்தப்போகுது. அப்பா அம்மா என்ன சொன்னாலும் final decision உங்களோடதாயிருக்கணும்.
“ஏன் மகேஷ் அப்பாகிட்ட அப்படி என்ன பேசினீங்க? வீட்டுக்கு வந்து உங்களைப்பத்தியே பேசிக்கிட்டிருந்தார். உங்களை அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சுபோச்சுன்னு நினைக்கிறேன்.”
“பெருசா ஒண்ணும் பேசலை நீங்களும் நானும் லவ் பண்றோமான்னு கேட்டாங்க, நான் நாம நல்ல நண்பர்கள்ன்னு சொன்னேன்.”
“ஓ! அதான் அவங்க அப்படி புகழ்ந்து பேசிக்கிட்டிருந்தாங்களா?”
இப்படி பேசிக்கொண்டே ஆபிஸை அடைந்தனர்.
***************
“விசாலம்! விசாலம்! யார் வந்திருக்காங்க பாரு. உட்காரும்மா “என்றார் சுந்தரம். சமையலறையிலிருந்து வெளியே வந்த விசாலம் “அடடே! கயல் வா, வா வீட்டில எல்லாம் சௌக்கியமா? எங்கே அவங்க வரலை? சுகன்யா எப்படியிருக்கா?” கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனாள் விசாலம்.
“நல்லாயிருக்கோம் அண்ணி, அவங்க பிஸினஸ் விஷயமாக வந்தாங்க, அப்படியே நானும் உங்களையெல்லாம் பார்த்திட்டு கோயிலுக்கும் போயிட்டு போகலாம்னு வந்தேன். மகேஷ் எப்படியிருக்கான்? தீபாவளிக்கு வந்தானா?”
சரி உங்களை மேலும் மர்மத்தில் வைக்க விரும்பவில்லை. வந்திருக்கும் கயல்விழி சுந்தரத்தின் தங்கை, சுந்தரத்தின் பெரியப்பா மகள், பெங்களூரில் வசிக்கிறாள். அங்கு அவள் கணவன் pwd காண்ட்ராக்டர்.இனி கதைக்கு செல்வோம்.
“வந்திருந்தான் கயல், முன்னை மாதிரியில்லை, இப்பல்லாம் வேலை ஜாஸ்தியாயிடுச்சு.ரொம்ப கஷ்டப்படறான் போயி அவன்கூடவேயிருந்திடலாம்னா எனக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் போயிடுது. கல்யாணப்பேச்சை எடுத்தாலும் கேட்க மாட்டேங்கிறான். என்னவோ அந்த மீனாட்சி தான் கண்ணை திறக்கணும்.”
“எல்லாம் நல்லா நடக்கும் அண்ணி, உங்க நல்ல மனசுக்கு அந்த ஆண்டவன் எந்த குறையும் வைக்கமாட்டான். ஒன்ணும் கவலைப்படாதீங்க.”
“ஏன் கயல் சுகன்யாவை கூட்டிட்டு வந்திருக்கலாம்ல 6 வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது.”
“இல்ல அண்ணி கடைசி வருஷம் பாருங்க, project, campus interviewன்னு அலைச்சலாயிருக்கா. அதான் அவளை disturb பண்ணலை. அண்ணி இந்த போட்டோவில இருக்கிறது மகேஷா அது?”
“ஆமாம் கயல் அவன் நண்பர்களோட மைசூர் போனப்போ எடுத்தது.”
“நல்லா வளர்ந்து ஹீரோ மாதிரியிருக்கான்.”
இருவரும் பேசிக் கொண்டே சமையலறையினுள் சென்றனர். சுந்தரம் தொலைக்காட்சியில் செய்திகள் கேட்கத்தொடங்கினார்.
****************
புதன்கிழமை மாலை 5 மணிக்கு நித்யாவை பெண் பார்க்க வந்தார்கள். பரத், அவன் அப்பா மற்றும் அம்மா வந்திருந்தார்கள். வந்தவர்களை வரவேற்று காபியும் பஜ்ஜியும் பரிமாறினார்கள். பரத் 6 அடி உயரம் ஒல்லியான தேகம்.
“எங்களைப்பத்தி தரகர் உங்ககிட்டே சொல்லுயிருப்பார். நான் ஆறுமுகம் ரிட்டையர்ட் புரொபசர், பெஸண்ட் நகர்ல சொந்தமா வீடுயிருக்கு. எங்க சொந்தம் எல்லாம் தஞ்சாவூர், கும்பகோணத்தில் இருக்காங்க.” இவர்கள் பேச்சு நீண்டு கொண்டிருந்தது. பரத் மௌனமாக அமர்ந்திருந்தான். ஏற்கனவே நித்யாவை போட்டோவில் பார்த்திருந்ததால் அவளை நேரில் பார்க்கும் ஆவல் அதிகமாகியிருந்தது.
நித்யாவை கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஏற்கனவே நாம் வர்ணித்தவை எல்லாம் ஒரு சிறு துளி என்பது போல முழுமதியாக ஒளிவீசினாள்.அவளது நிறத்துக்கு அந்த பச்சை நிறப்புடவை மேலும் அழகு சேர்த்தது. பார்த்த மாத்திரத்தில் பற்றிக்கொள்ளும் பாஸ்பரஸாக பரத் மனது அடித்துக்கொண்டிருந்தது.
ஒரு இரண்டு நிமிடம் கழித்து பரத்தும் நித்யாவும் தனியாக பேச அனுமதித்தனர்.
ஆண்களுக்கு வெட்கம் வராது என யார் சொன்னது. அன்று நித்யாவின் அழகை கண்டு பரத் மிகவும் வெட்கத்தால் சிவந்திருந்தான்.அவளை அமரச்செய்து தானும் அமர்ந்தான் பரத்.
“எனக்கு என்ன பேசறது எப்படி பேசறதுன்னு தெரியலை! நீங்க CA முடிச்சிட்டீங்கன்னு சொன்னாங்க, future பத்தி என்ன ப்ளான் பண்ணியிருக்கீங்க.”
“எனக்கு தனியா நிறுவனம் தொடங்க ஆசை.”
“நான் AGS ஆபீஸில் அக்கவுன்ட்ஸ் ஆபிஸரா இருக்கேன். தண்ணி, தம் அந்த மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லை. வாழ்க்கையில் பெருசா கனவுன்னு எதுவுமில்லை. உங்களை எனக்கு பிடிச்சிருக்கு, இனி நீங்கதான் சொல்லணும்.”
“முடிவெடுக்கறதுக்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் பேசணும். எனக்கு CS அப்புறம் Chartered financial analyst course படிக்கணும். எங்க அப்பா அம்மாவுக்கு யாருமில்லை கல்யாணத்துக்கப்புறமா நம்மக்கூட தான் இருப்பாங்க. எனக்கு நண்பர்கள் அதிகம்.”
“சரி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கலாம் எனக்கு ok”.
“சரி எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க” என்றாள் நித்யா. பின் இருவரும் வெளியே சென்றதும் அவரவர் பெற்றோருடன் தனித்தனியே கலந்தாலோசித்தனர்.
“அப்போ நீங்க யோசிச்சு முடிவை சொல்லுங்கள், நாங்க கிளம்பறோம்” என பரத் அப்பா சொல்ல, வாசல் வரை வந்து வழியனுப்பினர்.
—-கண்களில் தோன்றி உள்ளத்தில் முடியும் காதல் என்பது பொய். உள்ளத்தில் தோன்றி உயிர்பிரியும் வரை உள்ளதே காதல்.